districts

கோவை - சேலம் பயணிகள் ரயில் ஒரு மாதத்துக்கு ரத்து! பயணிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகம்

திருப்பூர், ஆக.1- கோவை – சேலம் பயணிகள் ரயிலை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு ரத்து செய்து, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ரயில்வே நிர்வா கம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கத் தின்போது தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் பல்வேறு முக்கியமான பயணிகள் ரயில்களை நிறுத்தியது. பொது முடக்கம் நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பிறகு, ரயில் போக்குவரத்து படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. எனி னும் சேலம் கோட்டத்தைப் பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய தொழில், வர்த்தக நகரங்களை இணைக்கக் கூடிய வகையில் இயக்கப்பட்டு வந்த பயணி கள் ரயில் பழையபடி இயக்கப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் தான்தோன்றித்தனமாக ரயில்களை ரத்து செய்வது, இயக்குவது, சில சமயம் பாதி வழித்தடத்துக்கு இயக்குவது என்று செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித் தடத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களை நம்பி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால், ரயில்வே நிர்வா கத்தின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இந்த வழித்தடத்தில் கோவை - சேலம், கோவை - ஈரோடு, திருச்சி - பாலக்காடு மற்றும் கோவை - நாகர்கோயில் ஆகிய பயணிகள் ரயில்கள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தன. இதில் கோவை - நாகர்கோயில் பயணிகள் ரயில் விரைவு பயணிகள் ரயிலாக மாற்றப் பட்டு ஏற்கெனவே நிறுத்தப்பட்ட பல சிற்றூர்  நிறுத்தங்கள் நீக்கப்பட்டு விட்டன. அதே போல் கோவை - ஈரோடு பயணிகள் ரயில் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வேலை நேரத்தில் வந்து சேர்வது, திரும்பச் செல்வது என்பது பல நூற்றுக்கணக் கானவர்களுக்கு பொருத்தமில்லாத நேர மாக மாறிவிட்டது. கோவை - சேலம் பயணி கள் ரயிலை தொடர்ச்சியாக சீராக இயக்கா மல் திடீர் திடீரென ரத்து செய்து விடுவார் கள். அதுபோல்தான் தற்போது ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த ரயில் ரத்து செய்யப் பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பராம ரிப்புக் காரணங்களுக்காக இந்த ரயிலை நிறுத் துவதாக சேலம் கோட்டம் கூறியுள்ளது.

போக் குவரத்து நெருக்கடி மிக்க இந்த வழித்தடத் தில் நூறு சதவிகிதத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து உள்ளது. பராமரிப்புப் பணி களுக்காக ரயில்களை நிறுத்துவதென்றால் வேறு பல ரயில்களையும் நிறுத்துவதாக அறி வித்திருந்தால் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் இந்த ஒரு ரயிலை மட்டும் நிறுத்து வது பராமரிப்புப் பணி காரணம் என்று நிர்வா கம் சொல்வது பொருத்தமானதாகத் தெரிய வில்லை என்று பயணிகள் கூறுகின்றனர். குறிப்பாக மக்கள் சேவைக்காக இயக்க வேண்டிய பயணிகள் ரயில்களை, வர்த்தக, லாப நோக்கத்தில் கணக்கிட்டு ரயில்வே நிர் வாகம் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படு கிறது. ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு, மக் கள் சேவை என்ற நோக்கத்தைக் கைவிட்டு, ரயில்வே துறையை தாராளமய, தனியார்மய கொள்கைப்படி பெரும் முதலாளிகளுக்குத் துண்டு, துண்டாக பல பிரிவுகளாகப் பிரித்துத் தாரை வார்க்கத் துடிக்கிறது. அரசின் நோக் கத்துக்கு ஏற்ப ரயில்வே அதிகாரிகளும் ஒத் துப்போய் செயல்படுகின்றனர்.  எனவேதான் உள்ளூர் மக்கள் தேவை யைப் பற்றி கவலைப்படாமல் ரயில்வே நிர்வா கம் தன்னிச்சையாக செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே, சேலம் கோட்டத்தில் பய ணிகள் ரயில் சேவையை அலட்சியப்படுத்து கின்றனர் என்று ரயில்வே ஊழியர்கள் கூறு கின்றனர். பயணிகள் ரயில்களை முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்மை யில் போராட்டம் நடத்தப்பட்டது. கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் மக்களைத் திரட் டிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறி வித்துள்ளனர். மக்களை போராட்டத்திற்குத் தள்ளக்கூடியதாக சேலம் கோட்ட ரயில்வே  நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருக் கிறது.