கோவை, ஏப்.19– அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் சிஐடியு ரயில்வே கூட் செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். கூட்செட்டில் குடிநீர், குளியல் அறை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு வசதிகள் செய்து தர வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் களுக்கு அடையாள அட்டை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோவை இருகூர் கூட்செட் வளாகத்தில் சிஐடியு ரயில்வே கூட் செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.ரமேஷ் குமார் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜன், துணைச் செயலாளர் பி.சுப்பிரமணி, இருகூர் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.