districts

img

பொள்ளாச்சி - பாலக்காடு ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு

பொள்ளாச்சி, பிப்.21- பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் ரூ.50 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், விரைவில் திறப்பு விழா காணவுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கோபாலபுரம், ராமநாதபுரம், மன்னூர், முத்தூர் போன்ற ஊர்களுக்கு தினந்தோறும் ஆயி ரக்கணக்கான வாகன ஓட்டிகள் பாலக்காட்டு சாலையை  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், வடுகபாளையம் பிரிவு அருகே ரயில்வே இருப்புப்பாதை செல்வதால் ரயில் வரும் நேரங்களில் பாதை அடைக்கப்படும். இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எனவே, இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை  எழுந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், என்ஜிஎம் கல்லூரியிலிருந்து, காந்தி நகர் பிரிவு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 20  தூண் கொண்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், தற்போது மேம்பால கட்டுமானப் பணி கள் முடிவடையும் தருவாயில் உள்ளதால்,  இன்னும் ஒரு சில தினங்களில் ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா காண  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக,  பால கட்டுமான பணிகள் தொடங்கியதால், வாகன ஓட்டி கள் குமரன் நகர், வடுகபாளையம் பகுதிகளில் சென்று மறு புறம் உள்ள பாலக்காடு சாலையை மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்று வந்து கொண்டிருந்தனர். தற் போது இந்த மேம்பாலத்தின் பணிகள் நிறைவடைந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் வாகன  ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.