districts

img

ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்க பொன்விழா

சேலம், மார்ச் 3- சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்கு மதி தொழிலாளர் சங்கத்தின் பொன் விழா, தொழிலாளர்கள் குடும்ப சங்க மம் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற் றது. சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்கு மதி தொழிலாளர் சங்கம் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, தொழி லாளர்களின் குடும்பத்தினர் ஒன்றி ணையும் நிகழ்ச்சி சேலம் இரும் பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித் தார். நிர்வாகிகள் பி.சக்திவேல், பி. மதியழகன், கே.எம்.மாரிமுத்து, கே. கோவிந்தராஜ், பி.சங்கர், கே.சுப்பிர மணி, ஏ.முனுசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். சங்கத்தின் செய லாளர் ஏ.கோவிந்தன் வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் ஆர்.சிங்காரவேலு, டி.உதயகுமார், மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், சுமைப்பணி தொழிலாளர் சம் மேளன பொதுச்செயலாளர் ஆர்.அருள்குமார், மாநிலப் பொருளாளர் குமார், மாவட்டத் தலைவர் பி.ஆறு முகம், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் வி.இளங்கோ, துணைத்தலைவர் கள் பி.பன்னீர்செல்வம், வி.ராம மூர்த்தி, சிஐடியு உருக்காலை சங்க  செயலாளர் கே.பி.சுரேஷ்குமார்,  ஆட்டோ தொழிலாளர் சங்கச் செயலா ளர் சி.உதயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பிரபு ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  இதைத்தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மாரத் தான் போட்டியை சிறப்பாக நடத் திக் கொடுத்த தோழமை சங்க நிர்வா கிகள், மருத்துவ முகாம் சிறப்பாக நடத்திக் கொடுத்த மருத்துவக்குழு வினருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டு, கௌரவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்களின் குடும் பத்தினர் ஏராளமானோர் பங்கேற்ற னர்.