நாமக்கல், அக்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட எலச்சிபாளையம் 8 ஆவது ஒன்றிய மாநாட்டில், ஒன்றியச் செயலாளராக ஆர்.ரமேஷ் தேர்வு செய் யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் 8 ஆவது ஒன்றிய மாநாடு ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஈஸ்வரன், ரஹ்மத் தலைமை யில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி.சுரேஷ் கொடியேற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றி னார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரமேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.வெங்கடாசலம் சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி வாழ்த்தி பேசினார். இதில், எலச்சிபாளையம் மல்லச முத்திரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாற்றில் காவிரி உபரி நீர் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எலச்சிபாளையத்தில் புதிதாக தேசிய வங்கி துவங்க வேண்டும். பத்திரப்பதிவுத்துறை, தீயணைப்புத் துறை அலுவலகங்கள் இப்பகுதியில் அமைக்க வேண்டும். எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, நிரந்தரமாக மருத்துவரை நிய மிக்க வேண்டும். எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. எலச்சிபாளையம் ஒன்றியக்குழு விற்கு 11 பேர் கொண்ட புதிய ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஒன்றியக்குழு செயலாளராக ஆர்.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி நிறைவுறையாற்றினார். முடிவில் ஒன்றியக் குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி நன்றி கூறினார்.