districts

img

சிபிஎம் தருமபுரி நகரச் செயலாளராக ஆர்.ஜோதிபாசு தேர்வு

தருமபுரி, நவ.24- மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி நகரச் செயலாளராக ஆர். ஜோதிபாசு தேர்வு செய்யப்பட் டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தருமபுரி நகரக்குழு மாநாடு, சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் சீதா ராம் யெச்சூரி நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர் ஜி.நாகராஜன், நகரக்குழு உறுப்பினர்  ஆர்.ஜோதிபாசு ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டக்குழ உறுப்பினர் ஆர்.ஜோதி பாசு வரவேற்றார். மாவட்டக்குழு உறுப்பினர்  எ.ஜெயா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வ நாதன் துவக்கவுரையாற்றினார். நகரச் செய லாளர் சி.முரளி அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கிரைஸாமேரி வாழ்த்திப் பேசினார்.  இம்மாநாட்டில், தருமபுரி நகரம், செங் கொடிபுரம், எம்ஜிஆர் நகர், நரசையர்குளம், குமாரசாமி பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். தருமபுரி நகர விரி வாக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கணக்கில்கொண்டு, புதிய புறநகர் பேருந்து நிலை யம் அமைக்க வேண்டும். புதிய  பேருந்து நிலையத்தில் சாலை யோர பழக்கடை வியாபாரிக ளுக்கு கடை வைக்க இடம் ஒதுக்கி தர  வேண்டும். சொத்துவரி உயர்வை தருமபுரி  நகராட்சி நிர்வாகம் திரும்பப்பெற வேண் டும். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நரம்பு, மூளை, இருதயம், புறநோயாளிப் பிரிவு மட்டுமே உள்ளது. உள்நோயாளி பிரிவு  துவங்க வேண்டும். தருமபுரியில் அரசு செவி லியர் கல்லூரி துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் தருமபுரி நகரச் செயலாளராக ஆர்.ஜோதிபாசு மற்றும்  9 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட செயலாளர் ஏ.குமார் நிறை வுரையாற்றினார்.