உதகை, அக்.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் குன்னூர் இடைக்குழு மாநாட்டில் செயலாளராக ஆர். இளங்கோவன் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் குன்னூர் இடைக்குழு மாநாடு, குன்னூர் ஹோட்டல் ப்ளூ ஹில்ஸில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் ராமன் குட்டி செங்கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.மனோஜ்குமார், வி. சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்த னர். நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் துவக்கவுரையாற்றினார். அறிக்கை யினை இடைக்குழுச் செயலாளர் ஆர்.இளங் கோவன் முன்வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுந்தரம் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், பழங்குடி கிராமங்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வனங்க ளில் விளையக்கூடிய பொருட் களை விற்பனை செய்வதற்காக பழங்குடி மக்களுக்கு தனி யான விற்பனை மையம் அமைத் துத்தர வேண்டும். தேயிலைக்கு நியாயமான விலை, மலை காய் கறிகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண் டும். ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் குன் னூர் இடைக்குழுச் செயலாளராக ஆர்.இளங் கோவன், 11 இடைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.வினோத் நிறைவுரையாற் றினார்.