திருப்பூர், ஏப்.3- உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் சனியன்று பள்ளி மாணவர்களுக்கு அறி வியல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன் னிட்டு, திருப்பூரின் 13 ஒன்றியங்களிலும் நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இப்போட்டியில் 316 பள்ளிகளில் இருந்து சுமார் 1000 மாணவர்கள் வரை பங்கேற்றனர். 4 மற்றும் 5 வகுப்புகள், 6,7, மற்றும் 8 ஆகிய வகுப்புகள் என இரண்டு பிரிவுகளில் தமிழ், அறிவியல், இயற் பியல், வேதியியல், வரலாறு, விளையாட்டு, பொது அறிவி யல், படம் பார்த்து சொல்லுதல் ஆகிய எட்டு பாடப்பிரிவு களில் வினாக்கள் கேட்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வின் முடிவில், உலக சுகாதார தினம் குறித்த விழிப்புணர்வும், அனைவருக்குமான சுகாதாரம் எனும் இந்த ஆண்டு கருப்பொருளை மையப்படுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.