districts

ஆன்லைன் மோசடியால் இழந்த பணம் விரைவில் மீட்பு

உதகை, செப்.27- ஆன்லைன் மோசடியால் பாதிக் கப்பட்டவர்களின் பணம் இன்னும் ஓரிரு நாட்களில் மீட்கப்படும் என உதகை காவல் துறையினர் தெரி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர்,  ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து பணி யாற்றும் வகையில் வேலை உள் ளதா? என்று பார்த்து வந்தார். இந்நி லையில், கடந்த ஜூலை 25 ஆம் தேதி யன்று வாட்ஸ் அப் மூலம் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வேலை வாய்ப்பு இருப்பதாகக்கூறி குறுந்தக வல் வந்தது. ஆரம்பத்தில் ஓட்டல் முன்பதிவு சம்பந்தமாக அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது. சில நாட் கள் கழித்து குறிப்பிட்ட தொகை முத லீடு செய்தால் இரட்டிப்பு லாபம்  தருவதாகவும், இதேபோல் பலருக் கும் லாபம் கொடுத்துள்ளதாகவும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இத னால் ஆரம்பத்தில் சிறிய தொகையை அந்த இளம்பெண் முதலீடு செய்து  பார்த்தார். அதற்கு அவருக்கு இரட் டிப்பு பணம் வந்துள்ளது. இதனை  நம்பிய அவர் பல்வேறு தவணைக ளாக ரூ.15,39,106 முதலீடு செய்தார். அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைக் கவில்லை. அதேபோல் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர்  இதுகுறித்து உதகை குற்றப்புல னாய்வு பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதேபோல், உதகை யைச் சேர்ந்த ஒருவரிடம் பங்குச் சந்தை வர்த்தகம் என்று கூறி, தனியார் செயலியில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்று ஆசைவார்த்தை காட்டி  ரூ.5,98,000 மோசடி செய்யப்பட்டது.  இந்த புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை  மீட்க போலீசார் நடவடிக்கையில் இறங் கினர். இதுபோன்ற சம்பவங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநி லங்களைச் சேர்ந்த குற்றவாளிகள் கைவரிசை காட்டி இருப்பார்கள் என் பதால் ஆண்டு கணக்காகி விடும். அப் போதும் முழு தொகையையும் மீட்க  முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலை யில் நீலகிரி குற்றப்புலனாய்வு பிரிவு  போலீசார் விரைந்து செயல்பட்டு இரண்டு மாதத்தில், பணம் மாற்றப் பட்ட வங்கிக்கணக்குகளை முடக்கி னர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த பணம் மீட்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.