districts

img

கார்ப்ரேட் நிறுவனங்களின் தூண்டுதலால்தான் 65 ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டதா?திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டத்தில் கேள்வி

திருப்பூர், ஏப்.24 –  கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுத லால்தான் 65 ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்று சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க  மாநில செயலாளர் டி.குமார் திருப்பூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டதில் கேள்வி எழுப்பி னார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரைமுறையில்லாமல் செய்யும் 65 ஏ சட் டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூ ரில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு  சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு கட்டுமா னத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் டி.குமார் தலைமை ஏற்று பேசியதாவது, சமூகநீதி அரசு என்று சொல்லிக் கொள்ளும்  இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த தொழிலாளர் களுக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை நிறைவேற்றலாமா? கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதிர்க்கும் இந்த சட்டம், கார்ப் பரேட் நிறுவனங்களின் தூண்டுதலால் நிறை வேற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. திராவிட மாடல் அரசு ஆரிய மாடலுக்கு எதிரா னது என்று கூறிக்கொண்டு, ஆரிய மாடல் அரசு போல் செயல்படலாமா என்று கேள்வி  எழுப்பினார். மேலும், 8 மணி நேர வேலை உரிமையைப்  பறிக்கும் 65 ஏ சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து  செய்ய வேண்டும். இல்லையேல் சிஐடியு தமி ழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தும்  என்று கூறினார். இதைதொடர்ந்து, அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மண்ட லச் செயலாளர் பி.செல்லதுரை, மின்வாரிய சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ், திருப்பூர்  மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் நிறைவுறையாற்றினார்.  இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் குப்புசாமி, ராமலிங்கம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று 65 ஏ  சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கம்  எழுப்பினர்.