திருப்பூர், ஆக.26- வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 5 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலை யம் செயல்பட்டு வருகிறது. தனியார் சார்பில் செயல்பட்டு வரும் இந்த கொள் முதல் நிலையத்திற்கு வெள்ளக் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட் டங்களில் அறுவடை செய்யும் முருங் கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் 125 விவசாயிகள், 5 டன் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வந் திருந்தனர். ஒரு கிலோ கரும்பு முருங் கைக்காய் ரூ.23க்கும், மர முருங்கைக் காய் ரூ.12க்கும், செடி முருங்கைக்காய் ரூ.15க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.