districts

img

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்பட்ட சம்பங்கி

தருமபுரி, ஜன.11- தருமபுரியில் கடும் விலை வீழ்ச்சி யின் காரணமாக, சம்பங்கி பூக்களை  சாலையோரம் கொட்டும் அவல  நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட் டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை கிழங்கு சாகுபடி செய்த 6 மாதங்களில் பூ பிடிக்க ஆரம் பித்துவிடும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் மகசூலுடன் ஆண்டு முழுவதும் சீரான விலை (கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை) கிடைக்கும். வழக்கமாக மார்கழி மாதத்தில் கோவில் திரு விழாக்களுக்கும், திருமண நிகழ்ச்சி களுக்கும் பூக்களின் பயன்பாடு அதி கரிக்கும். எனவே, மார்கழி, தை மாதங் களில் மகசூல் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சம்பங்கி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, தரு மபுரி மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந் நிலையில், கொரோனா தொற்று பர வல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்க ளுக்கு கோவில்களில் வழிபட அரசு  தடை விதித்துள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக சம்பங்கி விலை குறைந்து கிலோ ரூ.10க்கு விற் பனையானது. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால்,  தருமபுரிக்கு கொண்டு வந்த பூக்களை  விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இத னால், வேதனையடைந்த விவசாயி கள் பென்னாகரம் சாலை அருகே சம்பங்கி பூக்களை கொட்டிவிட்டு சென் றனர். சுமார் 5 டன் சம்பங்கி பூக்கள்  மலைபோல் சாலையோரம் குவிக்கப் பட்டிருந்தது.