districts

மாட்டிறைச்சி அரசியலில் சிக்கியுள்ள புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம்

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. 26 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வாரச்சந்தை, தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய சந்தை என்று கூறப்படுகிறது. இச் சந்தையின் ஒரு மூலையில், ஒதுக் குப்புறமாக மாட்டிறைச்சி கடை கள் செயல்பட்டு வந்தன.  இந்நிலையில், கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்  அறிவிப்புமின்றி, புல்டோசரை கொண்டு இடித்தது. மாட்டிறைச்சிக் கடை விற்பனையில் வரும் வரு வாயை வாழ்வாதாரமாய் கொண் டுள்ள 13 தலித் குடும்பங்கள், கடை கள் இடித்து தடைமட்டமாக்கியதால் கையறு  நிலைக்கு தள்ளப்பட்டனர். வட்டிக்குப் கடன் வாங்கி, குடும் பம் முழுவதும் சேர்ந்து பாடுபட்டு, கடை நடத்தி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தி, தங்கள் குடும்பத்திற்கான வருமா னத்தையும் பார்த்து வந்த 13 பட்டி யலின குடும்பங்களின் வாழ்நிலை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.  வழக்கம்போல் வாரச்சந்தை யில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு அப்பாவி மக் கள் பலமுறை நகராட்சி நிர்வா கத்தை அணுகினர். ஆனால் நக ராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. எனவே, உயர் அலுவலர்களுக்கும் மனு அனுப்பி வைத்தனர். நியாய மான பதில் கிடைக்கவில்லை. பட்டி யலின மக்களின் மாட்டிறைச்சிக் கடைகளை மீண்டும் வழக்கம் போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த் தைக்கு அழைத்து, மூன்று மாத  காலத்திற்குள் சிலேட்டர் ஹவுஸ் கட்டி, கறிக்கடைகளையும் கட்டித் தருவதாக எழுத்து மூலம் உடன்பாட் டிற்கு வந்தது. அதுவரை இறைச் சியை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்யலாம் என்று வாய் மொழியாக உறுதி அளிக்கப்பட்டது.  ஆனால், உடன்பாட்டின்படி தீர் மானமும் நிறைவேற்றவில்லை, கடைகளும் கட்டவில்லை.

அதேசம யம் வெளியில் இருந்து இறைச்சி யைக் கொண்டு வந்து சந்தையில் வைத்து விற்பனை செய்வதும் தடுக் கப்பட்டது. வேறு வழியின்றி நக ராட்சி அலுவலகம் முன்பு தொடர்  உண்ணாவிரதம் அறிவிக்கப்பட் டது. இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சிலேட் டர் ஹவுஸ் மற்றும் கறிக்கடைகளை சந்தையில் விரைவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது என் றும், வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரத்தை சந்தையில் தொடர்வ தற்கு ஆக்கப்பூர்வமான முயற்சி களை நிர்வாகம் மேற்கொள்வது என்று மீண்டும் உறுதியளிக்கப்பட் டது. இதனால் மீண்டும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு போராட்டம் அறிவிப்ப தும், பேச்சுவார்த்தைக்கு அழைப்ப தும், உடன்பாடு காண்பதும் பொரு ளின்றி தொடர்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை தீரவில்லை. சமூக நீதியை நிலை நாட்டும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவ தாக தமிழ்நாடு முதலமைச்சர் வாய்ப்பு  கிடைக்கிற இடங்களில் எல் லாம் முழங்குகிறார். ஆனால், ஆட்சி யின் கீழ் உள்ள புன்செய் புளியம் பட்டி நகராட்சி நிர்வாகத்தின் அதி காரிகளோ  ஆர்எஸ்எஸ் பரிவாரங் களின் அரசியலில் அகப்பட்டுள்ள னர். முதல்வர் தலையிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப் பாக இருக்கிறது. - சக்திவேல்