சாகித்திய அகாதமி விருது பெற்ற தேவிபாரதிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் புதுமலர் பதிப்பகம் மற்றும் புதுமலர் பத்திரிகை ஆகியவற்றின் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. புது மலர் இதழாசிரியர் கண.குறிஞ்சி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, திரைக்கலைஞர் கவிதா பாரதி (சென்னை), எழுத்தாளர் ச.பாலமுருகன், ஓவியர் எம்.சுந்தரன் மற்றும் சமூக நீதிக் கூட்டமைப்பு உறுப்பு இயக்கத்தினர் என பலர் பங்கேற்றனர்.