இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
ஈரோடு, பிப்.5- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர் பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்.27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல் தடுப்பு மற்றும் தேர்தல் செலவினம் குறித்து தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைத்து தேர்தல் நடத்தை விதி கள் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேற் கண்ட குழுக்கள் நிலைகளை கண்டறிய மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாநகராட்சி அலுவலக வளா கத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை யில் தேர்தல் நடத்ததை விதி மீறல் குறித்த புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 94980 மூலம் தெரிவிக்க இணைப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர் தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலை பேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதுவரை சுமார் 122 புகார்கள் பெறப்பட்டு அதற்கு 115 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
வெற்றிலை விலை உயர்வு: ஒரு கட்டு ரூ.3100க்கு விற்பனை
கோவை, பிப்.5- பொள்ளாச்சி மார்க்கெட்டில் சனியன்று வெற்றிலை வரத்து குறைவாக இருந்ததால், ஒரு கட்டு ரூ.3100 வரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பனிப்பொழிவால், வெற்றிலைகளின் எண் ணிக்கை குறைந்து, அறுவடை பாதிக்கப்பட்டது. இத னால், கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வெற்றிலை கட்டுகளின் எண்ணிக்கை குறை வாக இருந்தது. இதையடுத்து சனியன்று நடந்த ஏலத்தில், வெற் றிலை வரத்து குறைவாக இருந்தது. ஆனால், வெற்றி லையை வாங்க வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதன் காரணமாக, கூடுதல் விலைக்கு ஏலம் போனது. சுமார் 6500 வரையிலும் உள்ள வெற்றிலை கட்டு ஒன்று ரூ.1800 முதல் அதிகபட்சமாக ரூ.3100 வரை வரையிலும் என தொடர்ந்து கூடுதல் விலைக்கு ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
உதகை, பிப்.5- நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதி களில் சாரல் மழையுடன் பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நி லையில், காலநிலை மாற்றத்தால் சாலைகள், குடியி ருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பகுதி களில் வெள்ளியன்று பனி மூட்டம் சூழ்ந்து காணப் பட்டதுடன் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கோத் தகிரியில் இருந்து குன்னூா், உதகை செல்லும் நெடுஞ் சாலை பகுதிகள், கட்டபெட்டு, கொடநாடு, கீழ்கோத்த கிரி, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காணப்பட்ட பனி மூட்டம் மற்றும் சாரல் மழையால் கடும் குளிர் நிலவியது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாக னங்களின் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை எரியவிட்டபடி இயக்கினர்.
தருமபுரியில் புத்தக திருவிழா துவங்கியது
தருமபுரி, பிப்.5- தருமபுரி மாவட்ட நிர்வா கம், தகடூர் புத்தக பேரவை சார்பில் அரூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் ஆண்டு புத்தக திரு விழா ஞாயிறன்று துவங்கி யது. புத்தக திருவிழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கலந்து கொண்டு, முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், அரூர் உட் கோட்ட காவல் கண்காணிப் பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் மாணாக்கர்க ளுக்கு புத்தகம் வாசிப்பது குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புத்தக திருவிழாவில் அர சியல், சமூக மாற்றம் உள் ளிட்ட பல்வேறு வகையில் இடம் பெற்ற புத்தகங்க ளுக்கு மாணவர்கள் முன்னு ரிமை அளித்து ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பேருந்து - வேன் மோதி விபத்து: 3 பேர் பலி; 3 பேர் காயம்
திருப்பூர், பிப்.5 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கரூரிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந் தனர். மூவர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரு கின்றனர். காங்கேயம், வெள்ளக்கோயில் இடையே ஓலப்பா ளையத்திற்கு அருகே கும்பகோணம் சென்ற அரசு பேருந்தும், திருப்பூர் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரை சேர்ந்த மனோகரன் என்ப வரது மகன் லோகேஷ்வரன் (26), பாண்டியன் நகரைச் சேர்ந்த மருதாசலம் என்பவரது மனைவி பிரமிளா (45) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தேவி (50), மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் லோகேஸ்வரனின் தாயார் ஆவார். இந்த விபத்தில் மருதாசலம் (50), பாண்டியன் நகர் சவுண்டப்பன் என்பவரது மகள் அனு ரூபா (17), அண்ணா நெசவாளர் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரது மகள் தர்ஷினி பிரியா (17) ஆகியோர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
திருப்பூர், பிப்.5 - ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 12 கிலோ கஞ்சா கோவைக்கு கடத்தி வந்த இரண்டு பேரை திருப்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். சனியன்று திருப்பூர் ரயில் நிலையம் நடைமேடை முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடு பட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை மேற் கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையில் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை கண்டனர். அதை திறந்து சோதனை செய்ததில், அந்தப் பைகளில் போதைப் பொருளான கஞ்சா இருந்ததும், வாசம் தெரி யாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்றி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசா ருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு வரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ரகுப் (22) மற்றும் அல்தாப் (19) என தெரிய வந்தது. மேலும், ஒரிசா மாநிலம், பிரம்மப்பூர் பகுதியில் இருந்து கேரளா செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்ததும், கோவையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க வந்ததும் தெரிய வந்தது. மேலும் கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதால் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இறங்கி பேருந்து மூலம் கோவை செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
புகையிலை பொருட்கள் பதுக்கல் அவிநாசி அருகே இருவர் கைது
அவிநாசி, பிப்.5- அவிநாசி அருகே கார் ஓர்க் ஷாப்பில் பதுக்கி வைத் திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஆட்டையாம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சனியன்று போலீசார் சந்தேகத்திற்கு இடமாக கூறப்பட்ட கார் ஓர்க் ஷாப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்ப னைக்காக பதுக்கி வைத்திருந்த 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில், மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்ட சேவூர் அருகே போத்தம் பாளையம் செல்வராஜ் மகன் ஹர்ஷத் (எ) திருமூர்த்தி(31) வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் விற்ப னைக்காக பதுக்கி வைத்திருந்த 500 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அவி நாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மேட்டுப் பாளையம் சவுகத் அலி மகன் தர்வேஸ் முகைதீன்(36), சேவூர் பகுதியைச் சேர்ந்த முகமது பஷீர் மகன் ஜெயிலாபுதீன் (48) ஆகியோரை சனியன்று இரவு கைது செய்தனர். மேலும் தலை மறைவான திருமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்
ஜவாஹிருல்லா பேட்டி
திருப்பூர், பிப்.5 - ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், பாஜகவிடம் அடமானம் வைத்ததை போன்று உள்ள அதிமுக குழப்பமான நிலை யில் உள்ளது என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹி ருல்லா கூறினார். மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது: ஒன்றிய அரசு 44 வகையான சட்டங் களை நீக்கி பெரும் தொழிற் சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்திருப்பதை மனித நேய தொழிலாளர் சங்கம் எதிர்க் கிறது. தமிழகத்தில் வீட்டு பணியா ளர்களுக்கு சமூக பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம், வார விடுமுறை ஆகியவற்றை தமிழக அரசு அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், பாஜக விடம் தன்னை அடமானம் வைத் துள்ள அதிமுக கட்சி, தற்போது குழப்ப நிலையில் இருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய திராவிட கொள்கைகளுக்கு எதிராக, வாக்கு களை பிரிக்க, பசுந்தோள் போர்த் திய நபராக, நாம் தமிழர் கட்சியின் சீமான் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார். கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மர்மமான முறையில் செயல்பட்டு வருவதன் காரண மாக தமிழக அரசு அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மனித நேய தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை களையும் ஜவாஹிருல்லா தொழிற் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கி னார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சிறை
திருப்பூர், பிப்.5- விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தருமபுரியை சேர்ந்தவர் முருகன் (38). இவர் திருப்பூர் முருகானந்த புரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தார். கடந்த 2020 பிப்ரவரி 19ஆம் தேதி அதே பகுதியில் விளை யாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி க்குப் பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசா ரணை நிறைவடைந்து, நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார். இதில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித் தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரா னார்.
கூடுதல் கல்குவாரிகள் திறக்கப்பட்டால் மக்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்படும்
பல்லடம் அருகே கிராம மக்கள் அச்சம்
திருப்பூர், பிப்.5 - கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி பகுதி களில் கூடுதல் கல்குவாரிகள் திறக்கப் பட்டால் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்படும் என்று கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் மேற்கு ராசா கவுண்டன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட விநாயகர் கோவிலில் சனியன்று மாலை 7 மணி அளவில் ஊர் கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் இப்பகுதி சார்ந்த பல் வேறு கல்குவாரிகளுக்கு நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் தயாராவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது. ஏற்கனவே சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளை கண்காணித்து தடுப்பது, அனுமதித்ததை விட அதிக ஆழத்தில் வெட்டி, அதீத வெடிகளை பயன் படுத்தி நில அதிர்வுகளை ஏற்படுத்தி, அதிக ஒலியை ஏற்படுத்தி, வாழத் தகுதியற்ற பகுதி யாக இந்த பகுதிகளை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் கல்குவாரி கிரசர் செயல் பாடுகளை தடை செய்வது குறித்தும் விவா திக்கப்பட்டது. மேலும் சட்டத்திற்கு உட்பட்டு கல் குவாரி கள் செயல்படுவதற்கு அனுமதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், விவ சாயம் பாதுகாக்கப்பட வேண்டும், பொது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஊர் கூட்டம் நடை பெற்றது. ஏற்கனவே கோடங்கிபாளையம் சுற்று வட்டார பகுதியில் 30க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட குவாரிகள் திறப்பதற்கு அனுமதிக் கப்பட்டால் இந்த பகுதி முழுக்க மக்கள் வசிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமல் போய் விடும். பொதுமக்கள் மற்ற இடங்களை தேடி அகதிகளாக செல்ல வேண்டிய ஒரு சூழ் நிலை ஏற்படும் என்றும், இந்த ஊரையும், ஊர் மக்களையும் கல்குவாரி மற்றும் கிரசர் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய் யப்பட்டது. இதில், மேற்கு ராசாகவுண்டன் பாளையம், கோடாங்கிபாளையம், இச்சிப் பட்டி பொதுமக்கள் 150 க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
உறைபனி: மலர் நாற்றுகளுக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்
உதகை, பிப்.5- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் உறைபனியி லிருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உறைபனி தாக்கம் தொடங்கும். ஆனால், கடந்தாண்டு நவம்பர் 24 ஆம் தேதியன்று தொடங்கியது. தற்போது உறை பனி தாக்கம் குறைந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது நீர் பனி மற்றும் உறைபனி லேசாக காணப்படுகிறது. இதன் கார ணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை ஒட்டி யுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகள் கருக தொடங்கி விட்டன. பனியிலிருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா, மர வியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள மலர் நாற்று கள் மற்றும் அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடி களை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவர வியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற் றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனியின் காரணமாக உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவு கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் மிக குறை வாகவே உள்ளது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணம் குறைப்பு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு
ஈரோடு, பிப்.5- விசைத்தறியாளர்களுக்கு உயர்த்தப் பட்ட மின் கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்ட மைப்பு சங்க ஈரோடு அலுவலக கூட்டரங் கில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பா ளர்கள் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியகருப்பன், சு.முத்துசாமி, வி.செந்தில் பாலாஜி, த.மோ.அன்பரசன், வீ. மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், விசைத் தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர் களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரம், ஆயிரம் யூனிட்-ஆக உயர்த் தப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தப் படும். மேலும், விசைத்தறியாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.40 பைசா உயர்த்தப் பட்ட கட்டணம் 70 பைசாவாக குறைக்கப் பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களில் முதல் வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். தற்போது இடைத்தேர்தல் நடப்பதால், தேர் தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்படும் என தெரிவித் தார்.
அரசு உத்தரவை மீறி மது விற்பனை அமோகம் காவல் துறைக்கு பயந்து செல்போன் மூலம் பணம் வசூல்
கோவை, பிப்.5- அரசு உத்தரவை மீறி ஞாயிறன்று மது விற்பனை நடைபெற்றுள்ளது. அப்போது காவல் துறைக்கு பயந்து செல்போன் செயலி மூலம் பணம் வசூல் செய்துள்ளது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் ஞாயிறன்று அரசு மது பான கடைகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபானங்கள் விற்கக்ககூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நி லையில் சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை கள் கடை எண் 2212 மற்றும் 2267 ஆகிய கடைகளில் இயங்கும் பார்களில் சட்டவிரோ தமாக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களுக்கான பணத்தை கூகுள்பே மற்றும் பேடிஎம் ஸ்கேனர் வைத்து வசூல் செய்யும் நிகழ்வும் அரங்கேறியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொண்டால் திடீரென காவல் துறை ஆய்வு மேற்கொண்டாலும் பணமாவது தப்பிக்கும் என்ற நம்பிக்கையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். 150 ரூபாய் விற்கக்கூடிய ஒரு மது பாட் டிலை 300 முதல் 400 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில் களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், ஆட்சியரின் உத்தரவை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்க ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத் துள்ளனர்.
தெரு நாய் கடித்து முதியவர் உயிரிழப்பு
பள்ளிபாளையம், பிப்.5- பள்ளிபாளையம் அருகே தெரு நாய் கடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பிரேம் நகர், கரட்டாங்காடு, காவேரி ஆர்.எஸ் பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளது. பிப்.1 ஆம் தேதியன்று பிரேம் நகர் பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று, 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (77) என்பவர் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையி லும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந் தார். இந்நிலையில், ஞாயிறன்று சிகிச்சை பலனின்றி, முதிய வர் முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தெரு நாய் கடித்ததில் காயங்களுடன் கோவை கங்கா மருத்துவம னையில் அமுதா (62) சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறு கையில், பிரேம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. பலமுறை பேரூ ராட்சி நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. முதியவர் முனியப்பன் வீட்டை விட்டு வெளியே எங்கேயும், வயது மூப்பின் காரண மாக செல்ல மாட்டார். ஆனால், வீட்டு வாசலில் நின்று கொண் டிருந்த முனியப்பனை தெரு நாய் ஒன்று உள்ளே புகுந்து கடித்தது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என அர சுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணியிடத்தில் தொழிலாளி மரணம்
ஈரோடு, பிப்.5- ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள ப.வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (40). கிடைக் கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த இவர், கடந்த வியாழனன்று கருப்புச்சாமி என்பவருடன் ரைஸ் மில் வீதியில் குடியிருக்கும் கிரு பாகரன் என்பவரது வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தாமோதரன் திடீ ரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதைய டுத்து அவரை அங்கிருந்த வர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர் வரும் வழி யிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.