தருமபுரி, ஆக.29- வரைவு வாக்குச்சாவடி பட்டியலை தருமபுரி ஆட்சியர் வியாழனன்று வெளி யிட்டார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன் னிட்டு தருமபுரி மாவட்ட வரைவு வாக்குச் சாவடி பட்டியல்-2024-யை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இத னைத்தொடர்ந்து, ஆட்சியர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாக ரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற் றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிக ளில் மொத்தம் 12,62,409 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதிகளில் 1489 வாக்குச்சாவடிகளும், 888 வாக்குச் சாவடி மையங்களும் உள்ளன. தற்பொ ழுது, தருமபுரி மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக் குதல், வாக்குச்சாவடியை இடம் மாற் றம் செய்தல்,வேறு கட்டடத்திற்கு மாற் றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட வாக்குச் சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை1500-க்கு மிகையாக இருப் பின் அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும்.வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கி.மீ.-க்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தப்படும், என்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ் குமார், தருமபுரி வருவாய் கோட்டாட் சியர் இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.வில்சன் ராஜ சேகர், தேர்தல் தனி உள்ளிட்ட அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் கலந்துக்கொண்டனர்.