ஈரோடு, ஜன.12- புஞ்சை புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளி யம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளை யம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வா கம் மூலம் குடிநீர் விநியோகிக்கப் பட்டு வந்தது. தற்போது, குடியி ருப்பு பகுதி விரிவடைந்து வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரு கிறது. ஆகவே குடிநீர் விநியோ கத்தை சீர்படுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தி டம் பலமுறை வலியுறுத்தியும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள், சீரான குடி நீர் விநியோகம் செய்யக்கோரி பவானி சாகர் - புஞ்சை புளியம் பட்டி சாலையில் 200க்கும் மேற் பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலை யில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறை யினர் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அதிகாரிகளிடம் பேசி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.