districts

img

குப்பை கொட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், டிச.18- திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மங்கலம் ஊராட்சி சுல்தான் பேட்டை பகுதியில் திருப்பூர் மாநகராட் சியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை கொட்டுவதால் அப்ப குதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த குப்பைகளுக்கு தீ வைப் பதால் புகை மண்டலமாக சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் குப்பை கொட்டு வதை நிறுத்த வேண்டும். இதனரு கில் சுற்றுப்பகுதியில் கழிப்பிடம் புதுப் பிக்க வேண்டும். பால்வாடி கட்டிடம் மற்றும் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டுமென சுல்தான்பேட்டை பொதுமக்கள் கோரியுள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மங்கலம் திருப்பூர் சாலையில் சனி யன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதையடுத்து மங்கலம் ஊராட்சி  மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பொதுமக்களோடு பேசி, தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட் டனர்.  முன்னதாக, இப்போரட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வேலுசாமி, சுல்தான்பேட்டை கிளை செயலாளர் கந்தசாமி, காங்கிரஸ் சார் பாக சபா துரை, திமுக கோபால் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.