districts

img

ஈரோடு: மாநகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு, ஜன.29- ஈரோடு ஜீவா நகரில் மாநகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக் கப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் ஆங்காங்கே அமைக் கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை கள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகின் றது. இந்நிலையில், ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவாநகரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்திற்கு, 32, 34 35-ஆவது வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகள் எடுத்து வரப் பட்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. அதேநேரம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருவதால் அப்பகுதி யில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சக்தி நகர், பெரி யார் நகர், சூரம்பட்டிவலசு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் இருந்து அதிக அளவிலான குப்பைகளை, ஜீவாநகரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படுவதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாநக ராட்சி குப்பை லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட் டனர். மேலும் அவர்கள் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினையும் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த குமார் தலைமையிலான போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத் துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, ‘குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்று வது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும். இனி வெளி இடங்களில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து இங்கு கொட்டாமல் இருக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.