districts

img

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

நீலகிரி, டிச.16- குடிநீர், சுடுகாடு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தர வலியுறுத்தி குன்னூர் ஐயப்பன் காலனி பகுதி பொதுமக்கள் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திர னிடம் கோரிக்கை மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் ஐயப்பன் காலனி பொது மக்கள், சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பினர் கண்ணன் ஆகி யோர் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் புத னன்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்த னர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, ஐயப்பன் காலனி  பகுதியில் புதியதாக தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட் டுள்ளன. அதில், சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐயப்பன் காலனி பகுதியில் சுடு காடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஐயப்பன் காலனி  வரை உள்ளிட்ட சிமெண்ட் சாலையை, கரன்சி பஜார் வரை  நீட்டிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இப்பகுதியில் இருந்து குன்னூருக்கு எளிதில் சென்று வர முடியும். ஐயப் பன் காலனி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டுள்ளது.