திருப்பூர், நவ.12- திருப்பூர் மாநகரம் திலகர் நகர் பகுதி யில் சமூக விரோதிகள் பகிரங்கமாக மது, கஞ்சா போதை பயன்படுத்தி பொது மக்க ளுக்கு கொலைமிரட்டல் விடுகின்றனர். இவர் களது சமூக விரோத செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியி னர் மற்றும் பொதுமக்கள் செவ்வாயன்று 15. வேலம்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். புகார் மனு அளித்தவர்கள் இதுகுறித்து கூறுகையில், திலகர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் உயிருக் கும், உடைமைக்கும் அச்சுறுத்தும் வகையில் ராஜேஷ், கார்த்திக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் 7 பேர் செயல்பட்டு வருகின்ற னர். இருசக்கர வாகனங்களில் வந்து பொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்ற னர். மேலும், ஒரு அமைப்பின் பெயரைக் கூறி மிரட்டி வருகின்றனர். சாலையில் அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யில் சத்தம் போடுவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திலகர் நகர் மூன்றாவது வீதி, நால் ரோடு ஆகிய பகுதிகளில் அமர்ந்து கொண்டு பெண் களை கேலி செய்வதும், வெளி மாநிலத் தொழிலாளர்களை மிரட்டிப் பணம், செல் போன் பறிப்பது, வீடுகளில் புகுந்து திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற னர். இதை யாரேனும் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபடுப வர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இன்னும் 4 நாட்களில் காவலர்கள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் ஞாயிறன்று திலகர் நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளதாக தில கர்நகர் மக்கள் தெரிவித்தனர்.