districts

குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கசாவடி திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர், டிச.8- தாராபுரம் சாலையில் வேலம்பட்டி அருகே குட்டையை ஆக்கிரமித்து நெடுஞ் சாலை அருகே சுங்கச்சாவடி அமைத்துள்ள நிலையில், சுங்கச்சாவடியை திறப்பதற் கான முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு உறுப்பினர் ஜோதிபாசு கேட்டுக்கொண்டுள் ளார். திருப்பூர் தாராபுரம் சாலையில் வேலம் பட்டி அருகே குட்டையை ஆக்கிரமித்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அமைக் கப்பட்டு இருப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப் பட்டு வரும் நிலையில் சுங்கச்சாவடியை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. எனவே, இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டு உறுப்பினர் ஜோதிபாசு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஜோதிபாசு, திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாயன்று அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப் பூர் தாராபுரம் ரோடு வடக்கு அவிநாசிபாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் க.ச.எண்: 40/1இல் 1.765 ஹெக் டேர் பரப்பளவில் நீர்ப்பிடிப்பு குட்டை உள்ளது.

இந்த குட்டை நீரை பயன்படுத்தி சுற்றுவட்டாரத்தில் 150 விவசாயக் குடும் பங்கள் சுமார் 500 ஏக்கரில் தென்னை உள்ளிட்ட விவசாய பாசனம் பெற்று வரு கின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை 381  இல் அந்த குட்டையை ஆக்கிரமித்து சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை யடுத்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அங்கு  ஆய்வு செய்து இந்த சுங்கச்சாவடி நீர்பிடிப்பு குட்டையில் ஆக்கிரமித்து அமைக்கப் பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளார். இது நாள் வரை அந்த ஆக்கிரமிப்பு அகற் றப்படவில்லை. அத்துடன் தற்போது அந்த  சுங்கச்சாவடியை திறப்பதற்கும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்கு உரிய வரை முறைகளின் படி போதிய அகலத்தில் சாலை அமைக்கப் படவில்லை மேலும் சாலையின் குறுக்கே  இருக்கும் மின் கம்பங்கள் அகற்றப்பட வில்லை. எனவே வேலம்பட்டி குட்டைகள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஆக்கிர மிப்பை அகற்றவும், நீர்ப்பிடிப்பு குட்டையை தூர்வாரி விவசாயிகள் பயன்படுத்தவும் உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட  ஆட்சியரை ஜோதிபாசு கேட்டுக்கொண்டுள் ளார்.