districts

img

கல்குவாரி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தருமபுரி, மார்ச் 3- நல்லம்பள்ளி அருகே புதிய தாக தொடங்க உள்ள கல்குவா ரிக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் தெரிவித்து, போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியத்திற்குட்பட்டது நாகர்கூடல் ஊராட்சி. இந்த ஊராட்சி யில் உள்ள கரடிகால்குண்டு பகுதி யில் 150க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் தனியார்  கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. ஆனால், அப் பகுதி பொதுமக்கள் கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதனை மீறியும் கல்குவாரி பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.  இதன்பின்னரும், கல்குவாரி அமைக்கும் பணி தடைபடாமல் நடைபெற்று வந்ததால் கடும் அதி ருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வியாழனன்று கல்குவாரி அமைக் கும் இடத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங் கட்டேஷ்வரன், போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது, பொது மக்கள் கூறுகையில், இங்கு கல் குவாரி அமைந்தால், எங்களுடைய விவசாயம் முழுவதுமாக பாதிக் கும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப் புள்ளது. எனவே, எங்கள் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு முழுமை யாக தடை விதிக்க வேண்டும் என்ற னர். இதனைக்கேட்ட வெங்கடேஷ் வரன் எம்எல்ஏ, இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகாரளித்து, கக் குவாரி செயல்படாத வண்ணம் நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். இதன்பின் அனைவரும்  கலைந்து சென்றனர்.