தருமபுரி, பிப்.11- நளப்பன நாயக்கனஅள்ளி கிராமத்தில் புதிய மது பானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொது மக்கள் மாவட்ட டாஸ்மாக் பொதுமேலாளரிடம் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சஜ்ஜல அள்ளி ஊராட்சிக்குட்பட்ட நளப்ப நாயக்கனஅள்ளி கிராமத் தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக் கிராமத்தில் புதிய மதுபானக் கடை திறக்க உள்ளதாக தக வல் பரவியது. இதனிடையே, பாப்பாரப்பட்டியில் மூன்று மது பானக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் இரண்டு கடை கள் ஏற்கனவே வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், பாப்பாரப்பட்டியில் நெடுஞ்சாலை விரி வாக்க பணி நடைபெறவுள்ள நிலையில், அங்கு செயல்பட்டு வரும் மதுபானக் கடையினை நளப்ப நாயக்கனஅள்ளி கிரா மத்திற்கு மாற்றிட தேவையான நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, தங்களது கிராமத்திற்குள் மதுபானக் கடை திறக்கக்கூடாது என தெரிவித்த அப்பகுதி மக்கள், தருமபுரியிலுள்ள டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரியை நேரில் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டாஸ்மாக் மேலாளர், நளப்ப நாயக்கனஅள்ளி கிராமத்தில் மதுபானக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.