திருப்பூர், டிச.8- அவிநாசி அருகே மதுபான கூடம் திறக்கப்படாது என்று வட்டாட்சியர் உறுதி அளித்த பின்பும், மதுபான கூடம் மீண்டும் திறக்க படும் என நிர்வாகிகள் கூறியதால், வெள்ளியன்று பொதுமக் கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக ையிட்டு மனு அளித்தனர். சேவூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் பகுதியில் தனி யார் மதுபான கூடம் செயல்பட்டு வருகி றது. இந்த மதுபான கூடம் செயல்படு வது பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமை வதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மது பான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோ ருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிட மும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தி னர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப் பாட்டம் நடத்தினோம். வட்டாட்சியர் மற் றும் போலீசார், பொதுமக்கள் முன்னி லையில் அந்த மதுபான கூடம் திறக்கப் படாது என்று உறுதி அளித்தனர். இதை யடுத்து கலைந்து சென்றோம். பின்னர் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப் பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப் பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென் றோம். இந்நிலையில் தற்போது அந்த மது பான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண் டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்க ளுக்கு இடையூறாக அமையும். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த மது பான கூடத்தை இங்கிருந்து முற்றிலு மாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது.