உதகை, டிச.14- குன்னூர் சுற்றுவட்டார பகுதிக ளில் நிலவும் அடர் பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோ றும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக் கம். அதன்படி அங்கு தற்போது கன மழை பெய்து வருகிறது. குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை யில் பருவமழை காரணமாக இது வரை 13 இடங்களில் மண்சரிவு ஏற் பட்டு உள்ளன. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதுதவிர மலைப்பாதையின் பல் வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத னால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பய ணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவு கிறது. இதற்கிடையே நீலகிரி மாவட் டத்தில் தற்போது பனிப்பொழிவு அதி கரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இத னால் எதிரே வரும் வாகனங்கள் தெரி யவில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங் களை மெதுவாக இயக்கி வருகின்ற னர். குன்னூர் பகுதியில் அவ்வப் போது சாரல் மழையுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக குன்னூர் மலைப் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகையில், குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர் பனிமூட்டம் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத் தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இந் நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்க ளில் பயணித்து வருகிறோம், என்ற னர்.