districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி

நாமக்கல், செப்.15- எலச்சிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முன்பு தொடர் சாலை  விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலை யில், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்  போராட்டத்தின் விளைவாக வேகத் தடை அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள எலச்சி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை யில், கடந்த 10 வருடத்திற்கு முன்பு  சீரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டது. அப்போது, பள்ளிக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவ டைந்த பின்பு, வேகத்தடை அமைக் கப்படாததால் தொடர் விபத்துக் கள் ஏற்பட்டு வந்தன. இதில் மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்ப குதி பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் விபத்தில் சிக்கி னர். எனவே, பள்ளியின் முன்பு  வேகத்தடை அமைக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன்ஒருபகுதியாக, எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெற்ற உண் ணாவிரதப் போராட்டத்தில், அப்ப குதி பொதுமக்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த பல்வேறு துறை அதி காரிகள், வேகத்தடை அமைக்கப்ப டும் என எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தனர். இதனிடையே, போராட் டங்கள் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் மீது எலச்சி பாளையம் காவல் துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, போடப் பட்ட பொய் வழக்கு தள்ளுபடி செய் யப்பட்டது. இதன் விளைவாக  தற்போது அரசு பள்ளி முன்பு வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளது. இத னால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், வேகத்தடை அமைய காரணமாக இருந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  எலச்சிபாளையம் ஒன்றியக்குழு விற்கு பாராட்டு மற்றும் உணர்ச்சிப்  பெருக்கோடு நன்றி தெரிவித்தனர்.