districts

img

வேலம்பாளையம் மருத்துவமனை திறப்பது எப்போது? அலைச்சலை தவிர்க்கப் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர், மார்ச் 9- திருப்பூர் 15, வேலம்பாளையம் பகுதியில்  கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக் கான கட்டுமான ஒப்பந்த காலக்கெடு கடந்த  ஆண்டு நவம்பர் மாதமே முடிந்த நிலையில்,  இன்னும் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இம்மருத்துவமனை எப் போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூரில் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது போல், வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் 15,வேலம்பாளையம் பகு தியில் ஏற்கெனவே இருக்கும் ஆரம்ப சுகா தார நிலையத்தை தரம் உயர்த்தி, அதன் அரு கிலேயே அரசு மருத்துவமனை கட்டுமானப்  பணி நடைபெற்று வருகிறது. கடந்த பிப். 2022ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 86  படுக்கைகளுடன் பொது வார்டு, அறுவை  சிகிச்சை பிரிவு, ஆய்வகம், உள்நோயாளி கள் தனிப்பிரிவு, விரிவுபடுத்தப்பட்ட ஸ்கேன்  வசதியுடன் புதிய மருத்துவமனை தேசிய மற் றும் மாநில நகர்ப்புற சுகாதார திட்டம், ஜப் பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை நிதி ரூ.27  கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடக்கப்பட் டது. கடந்த நவம்பர் மாதத்திற்குள் மருத் துவமனை பணிகள் முடிக்கப்பட்டு 2023 டிசம் பர் மாதிற்குள் மருத்துவமனை திறக்கப்படும்  என கடந்தாண்டு பொதுப்பணித்துறையினர்  தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர்  மாதமே கட்டுமானப் பணிக்காக நிர்ணயித்த  காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் இன் னும் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல்  உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், திருப்பூர், 15,வேலம்பாளையத்தில், அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு  கடந்த ஆண்டே திறக்கப்பட்டு செயல்பாட் டுக்கு வரும் என எதிர்பார்த்தோம். 2022  ஆண்டே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட் டும் இன்னும் மருத்துவமனை முழுமையாக  முடிக்கப்படவில்லை. மூன்று தளங்களுக் கானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன் னும் சில பணிகள் நடைபெற்று வருகிறது.  ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இப்பகுதி யிலிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது.  15 வேலம்பாளையத்தில் வடக்கு பகுதிக்கான அரசு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந் தால், அவிநாசி சாலையில் உள்ள பகுதி மக் கள் பெரும்பாலானோர் வேலம்பாளை யம் அருகில் உள்ளதால் இம்மருத்துவம னையை பயன்படுத்துவார்கள். மேலும், இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் போது, விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சையை விரைவாக பெற முடியும் என்ற னர். விரைவில் இம்மருத்துவமனையைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் கூறினார்.