districts

img

சித்திரப்பட்டி அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, பிப்.28- சித்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  இடிந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றி புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சித்திரப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2  மாதத்திற்கு முன்பு பெய்த மழையினால் பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனை பயன் படுத்தி சமூக விரோதிகள் சிலர் பள்ளியின் உள்ளே புகுந்து மது அருந்தி பள்ளி வளாகத்தை அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் சுற்றுச்சுவர் அருகே  விளையாடி வருவதால், அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும்  அபாயம் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன்கருதி  புதியதாக சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.