districts

img

ரேசன் அரிசி கடத்தல் - வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம், ஜன.31- தாராபுரம் வட்டார பகுதியில் உள்ள  சில ரேசன் கடையில் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக வட்டாட்சியர் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர். தாராபுரம் ஜவுளி கடை வீதி அருகே  பஜனை மடத்தெரு உள்ளது. இப்பகுதியில் 10 ஆம் எண் கொண்ட ரேஷன் கடை செயல் பட்டு வருகிறது. இந்த கடையின் மூலம் சுமார் 942 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியா வசிய ரேஷன் பொருட்களான பருப்பு, பாமா யில், சர்க்கரை, கோதுமை, மண்ணெண் ணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 600க்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர் களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி இல வசமாக வழங்கப்பட்டு வருகிறது. சில அரிசி அட்டைதாரர்கள் அரிசியை இலவசமாக வாங்கிய பின் கிலோ ரூ.5க்கு இடைத்தரகர் களுக்கு விற்று விடுகின்றனர்.  மேலும் சில ரேசன் கடைக்காரர்களும், பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை விற்பது தாராபுரம் பகுதியில் தொடர் கதையாகி வருகிறது. அந்த அரிசியை விலைக்கு வாங் கும் இடைத்தரகர்கள் தாராபுரம் சுற்றுவட் டார பகுதியில் செயல்படும் சில குறிப்பிட்ட  அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்றுவிடுகின்றனர். பின்னர்  அரிசி ஆலையில் அரிசி பாலிஷ் செய்யப் பட்டு அதனை வெளி மாநிலங்களுக்கு கிலோ  ரூ.25 வரை விற்பனை செய்வதும், அரிசியை  பவுடராக்கி மாடுகள் மற்றும் கோழி தீவனங் களாகவும் மாற்றி விற்று வருகின்றன. இந்த  நிலையில் ஞாயிறன்று 10 ஆம் எண் கொண்ட ரேஷன் கடை அருகே அரிசியை  விற்பனைக்கு கொண்டு செல்ல மூட்டை  மூட்டைகளாக கட்டி வைத்துச் சென்றுள்ள னர். இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கள் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத ளங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து  தாராபுரம் வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.