கோபி, செப்.27- கோபி அருகே நஞ்சை புளியம்பட்டி யில் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக் கும் குறுகிய இரும்பு பாலத்தை அப் புறப்படுத்திவிட்டு, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பவானி ஆற்று பாசனப் பகுதிகளில் ஆயி ரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை விவசா யம் செய்து வருகிறனர். இப்பகுதியில் கரட்டடிபாளையம் - பங்களாபுதூர் சாலையில் கடந்த 90 வருடங்களுக்கு முன் போக்குவரத்திற்காகவும் விவசா யிகள் இடுப்பொருட்கள், அறுவடை செய்த வேளாண் பொருட்களை எடுத்து செல்லும் வகையில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. தற்போது இச்சா லையில் அமைந்துள்ள பழமையான இரும்பு பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்து கள் மற்றும் பொது போக்குவரத்து அதி களவில் காணப்படுகிறது. கனரக வாக னங்கள் எதிர் எதிர் திசையில் வரும் போது எதிர் வாகனங்கள் நின்றிருந்து செல்ல வேண்டி நிலை ஏற்பட்டு வரு கின்றன. இதனால் போக்குவரத்து இடை யூறு மற்றும் விபத்துக்களை தவிர்த்து செல்ல பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய இரும்பு பாலத்தை அப்புறப் படுத்தி விட்டு புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பொது மக்கள், வாகன ஓட்டிகள் பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்திற்கு பதிலாக புதிய உயர்மட்ட பாலம் அமைத்திட கடந்த சில வருடங்களுக்கு முன் அரசு சார் பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நில ஆர்ஜித பணிகள் முடிவுற்றது. ஆனால் உயர்மட்ட பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் திட்டம் கிடப் பில் உள்ளது. உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.