சேலம், டிச.21- பணி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் மறை வுக்கு காரணமானவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த் திபன் என்பவர், பல்வேறு பணி நெருக் கடிகள் காரணமாக கடந்த டிச.17 ஆம் தேதியன்று விஷமருந்தி தற்கொ லைக்கு முயற்சி செய்துள்ளார். இத னையடுத்து உடனடியாக அவரை செங் கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புத னன்று காலை உயிரிழந்தார். இதனிடையே, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத் தின் சார்பாக வளர்ச்சித்துறையில் நில வும் பணி நெருக்கடிகளை கைவிட வலி யுறுத்தி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வரும் சூழலில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர் பார்த்திபனின் மறைவு பேரதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வளர்ச்சித்துறை ஊழியர்களின் உயிருக்கு உலை வைக் கும் இத்தகைய பணி நெருக்கடிகளை யும், விடுமுறை தின ஆய்வுகள், காலம் கடந்த ஆய்வுகள், கணக்கற்ற ஆய்வு கள் என அனைத்தையும் கைவிட வேண் டும். பார்த்திபனின் இறப்பிற்கு காரண மான அலுவலர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி மாநிலம் தழுவிய வட்டார தலை நகரில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கள் சங்கத்தினர் ஒரு மணி நேரம் அலுவ லக வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதன்படி தாரமங்கலம் வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் ஆஸ்டின் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.