districts

img

பெண் காவலர்களுக்கு மனநல கருத்தரங்கம்

திருப்பூர், ஜூலை 9- திருப்பூரில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களுக்கு மன அழுத்தம்  மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த  சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நடத்தப் பட்டது. திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  நடைபெற்ற கருத்தரங்கை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத் தார். இதில் கோவை பாரதியார் பல்கலைக் கழக பேராசிரியர் பரணி பங்கேற்று மன  அழுத்தம் மற்றும் மன அழுத்த மேலாண்மை  குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். இதில் பெண் காவலர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு கள் குறித்து விரிவாக விளக்கிக் கூறப்பட் டது. மொத்தம் 94 பேர் கலந்து கொண்ட னர்.