நாமக்கல், ஆக.9- ராசிபுரம் அருகே நடைபெற்ற மக் கள் தொடர்பு முகாமில், 538 பயனாளிக ளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா. மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட் டம், மங்களபுரத்தில் புதனன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஆட்சியர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு, 538 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும், ரூ.20 லட்சம் மதிப் பீட்டில் ஒரு புதிய திட்டப்பணிக்கு நிர் வாக அனுமதியினையும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ராசிபுரம் மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் உரிய சிகிச்சைகள் பெறுவதற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை ராசிபுரத்தில் அறிவிக்கப்பட்டு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. நாமகிரிப் பேட்டை பகுதிக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் கொண்டு வரப் படவுள்ளது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. முத லமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் பல் வேறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.