ஈரோடு குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா இணை சீருடைகள் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாஜலம், மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.