மதுரை, அக்.6- மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதி மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு முகாம் மதுரை தெப்பக்குளம் தியாகராஜ பொறியியல் கல்லூரி யில் வியாழனன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் முயற்சியால் நடை பெற்ற முகாமில் 1400 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தார்கள். இந்நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா , மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வுத்துறை அதிகாரி இரா. இரவிச்சந்தி ரன், மாமன்ற உறுப்பினர்கள் டி. குமரவேல், கார்மேகம், தமிழ்ச் செல்வி, செந்தாமரைக் கண்ணன், சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், எஸ். அழகர்சாமி, டி. செல்வராஜ், பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநகர் மாவட்டத் தலைவர் பி. வீரமணி, செயலா ளர் பாலமுருகன், காதுகேளாத வாய்பேசதோர் சங்க பொறுப்பாளர் பி. ஜோதிபாசு ஆகியோர் முகாமில் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு அடையாள அட்டை, பேருந்து, ரயில் பயண சலுகை அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, நிவாரண உதவித் தொகை, சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் முகாமில் செயற்கை கை, கால் பொருத்துவதற்கான அளவிடுகள் எடுக்கப்பட்டது. முகாமில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், மாதர் சங்கத்தினர், அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை செய்தார்கள்.