உதகை, மார்ச் 14- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க கோரி இபிஎப் ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் செவ்வாயன்று உதகை ஏடிசி திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இபிஎப் ஓய்வூதியர் நல சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை ஏற்றார். இபிஎப் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.வினோத், எஸ்பிடி மாவட்ட தலைவர் ஆப்ரஹாம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர். அனைத்து இபிஎப் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து இபிஎப் ஓய்வூதியர்களுக்கு உயர்ந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். பஞ்சப்படி , மருத்துவ காப்பீடு இபிஎப் ஓய் வூதியர்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக் கங்கள் எழுப்பினர். இறுதியாக இபிஎப் ஓய்வூ தியர் சங்க நிர்வாகி சுப்பிரமணி நன்றி கூறி னார்.