districts

img

துறை அமைச்சரை சந்தித்து நிறைவேற்ற வலியுறுத்தப்படும்- பி.ஆர்.நடராஜன்

கோவை, ஜூன் 6- காப்பீட்டு  மற்றும் பொது காப் பீட்டு கழக ஓய்வு பெற்ற ஊழியர் களின்  குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்கிற  கோரிக்கையை நாடாளுமன்றத் தில் வலியுறுத்தமாறு கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  இதுதொடர்பாக பி.ஆர்,நட ராஜனிடம் கொடுக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, எல்ஐசி  மற்றும் பொதுக்காப்பீட்டு  நிறுவன ஓய்வூதியர்களுக்கு, 15  சதவிகிதம் குடும்ப ஓய்வூதியம்  மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், காப்பீட்டு கழகத் தில் இருந்து ஓய்வு பெற்றவர் களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை 30 சதமாக உயர்த்தி தர பல்வேறு வகையான போராட்டங்கள் நடை பெற்றன.  இக்கோரிக்கையை எல்ஐசி  நிர்வாகமும், பொது காப்பீட்டு நிறு வன நிர்வாகமும் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரித்தது. இக் கோரிக்கையை ஒன்றிய அரசின்  ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது.  காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மற்ற நிதி நிறுவனங்கள், அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெறுகின்ற ஓய்வூதியர்களுக்கு இக்கோரிக்கையானது  நீண்ட நாட் களுக்கு முன்பே நிறைவேற்றி வழங்கப்பட்டு வருகிறது.  எனவே, இக்கோரிக்கையின் மீது அழுத்தம் கொடுத்து உடனடி யாக நிறைவேற்றித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுவைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர் நடராஜன், கோரிக்கை நிறைவேற துறை சார்ந்த அமைச் சரை சந்தித்து  உரிய  நடவடிக்கை  மேற்கொள்வதாக உறுதியளித் தார்.  இந்நிகழ்வில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத் தின் இணைச்செயலாளர் சுரேஷ், எல்ஐசி கோவை கோட்ட பென்சன் தாரர்கள் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொரு ளாளர் ரங்கநாதன் மற்றும் பொது இன்சூரன்ஸ் பென்சன்தாரர்கள் சங்கத்தின் செயலாளர் சங்கர நாராயணன், எஸ்.வி.சங்கர், வேணுகோபால், சதாசிவம், ஜான்  சுந்தர்ராஜ், லட்சுமணன் ஆகியோர்  உடனிருந்தனர்.