districts

img

ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிடுக

நாமக்கல், ஜூன் 24-  நியாய விலை கடையில் இரண்டு மாத காலமாக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப் படவில்லை, இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் தொட்டியம்பட்டி ரேசன் கடைகளில், கடந்த இரண்டு மாத காலமாக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படவில்லை. இதனால் ஏழை மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ரேசன் கடைகளில் மாதம் தோறும் முறையாக தட்டுப்பாடு இல்லாமல் உணவுப் பொருட்களை  வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தொட்டியபட்டி கிளையின் சார்பில்  ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் நடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.பெரியசாமி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர்  ஞானாம் பாள், கிளைச் செயலாளர் மீனாட்சி செல்வம் மற்றும் ராஜா ராஜேந்திரன் பழனியம்மாள் தாயம்மாள் லட்சுமி, ராஜாமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.