திருப்பூர், பிப். 18 - எங்கே எனது மனு? எங்கே எனக்கு பட்டா? என்ற முழக்கத்துடன் ஊத்துக்குளி யில் நான்கு மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகா கமிட்டியின் சார்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி ஊத்துக்குளி வட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது இலவச வீட்டுமனை பட்டா கோரி 426 மனுக்களை மக்கள் அளித்தனர். இந்த ஏழை, எளிய மக் களுக்கு பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்து வருவாய் துறை மூலமாக எவ்வித தகவலும் இதுவரை அளிக்கப்ப டவில்லை. ஆகவே கொடுத்த மனுவிற்கு, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்பதற்கு, எங்கே எனது மனு? எங்கே எனக்கு பட்டா? என நடைபெற்ற ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் மனுக்கொடுத்த மக்கள் திர ளாக கலந்து கொண்டனர். ஊத்துக்குளி ஊத்துக்குளி நில வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடை பெற்ற போராட்டத்திற்கு தாலுகா செயலா ளர் கு.சரஸ்வதி தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் கை.குழந்தைசாமி, ப. வண்ணக்கொடி, கு.பாலமுரளி மற்றும் பாரதி நகர் கிளைச் செயலாளர் விக்னேஷ்வரன், டவுன் கிளைச் செயலாளர் கே.பெரியசாமி, ஆர்.எஸ்.கிளை முன்னாள் செயலாளர் வி.கே.பழனிசாமி, கரைப்பாளையம் கிளைச் செயலாளர் கருப்புசாமி, பனியன் சங்க பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி வருவாய் ஆய்வாளர் கோமதி, ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலர் பாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஊத்துக்குளி வட்டாட்சியரிடம் கலந்து பேசி நிலங்களை கண்டறிந்து நிலமற்ற மக்க ளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதியளித்தனர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உரையாற்றினார். இதில் ஏராளமான பெண் கள் கலந்து கொண்டனர். செங்கப்பள்ளி செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவ லர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு செங்கப்பள்ளி கிளை உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார். நீலாக்கவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர் பாபு (எ) கருப்புசாமி உட்பட திளான பெண்கள் கலந்து கொண்டனர். செங் கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கவிதா மனு கொடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பட்டா வழங்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நடுப்பட்டி பல்லகவுண்டன்பாளையத்தில் நடுப் பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் க.பிரகாஷ் தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் வி. காமராஜ், ப.க.பாளையம் மாதர் கிளைச் செய லாளர் வி.மீராலட்சுமி உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். நடுப்பட்டி கிராம நிர் வாக அலுவலர் நிர்வாகிகளோடு பேசி பட்டா வழங்க உறுதியளித்தார். குன்னத்தூர் குன்னத்தூர் நில வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர். மணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, குன்னத்தூர் நகர கிளைச் செயலாளர் பி.சின்னசாமி, ஒத்தப்பனை மேடு கிளைச் செயலாளர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குன்னத்தூர் வரு வாய் ஆய்வாளர் கட்சி நிர்வாகிகளோடு பேச் சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகள் உத்த ரவு பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.