districts

img

ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு கோவையில் போராட்டம் - கைது

கோவை, டிச.30- ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் களை போலீசார் கைது செய்த னர். கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா  மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சி நடைபெற்று வரு கின்றது. மத ஒற்றுமையை சீர்குலைக்கும்  வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யினை தடை செய்ய வலியுறுத்தி வியாழ னன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தை கள் கட்சி, மக்கள் அதிகாரம்  உட்பட  பல் வேறு அமைப்புகளை சேர்ந்த 25க்கும் மேற் பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருஷ்ணன்  உட்பட 25க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர்  குண்டுக்கட்டாக தூக்கி  சென்று கைது செய்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி யது.