ஈரோடு, ஜூலை 13- நிறுவன முத்திரையிடப்படாத பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும் பப்பெற வேண்டும். இல்லையென் றால் விரைவில் போராட்டம் நடத் தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு மாநில தலை வர் ஏ.எம்.விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்ட இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் ஈரோட்டில் செவ்வாயன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் வி. பாலசுப்பிரமணி தலைமையில் நடை பெற்றது. செயலாளர் எஸ்.செந்தில் குமார் வரவேற்றார். உணவுப் பாது காப்பு மற்றும் மருந்து தரக்கட்டுப் பாட்டு துறை மாவட்ட நியமன அலு வலர் ஜெ.தங்கவிக்னேஷ் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி சான்றி தழ்களை வழங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து ஏ.எம்.விக்கி ரமராஜா செய்தியாளர்களிம் கூறு கையில், பெரு வணிக நிறுவனங்கள் காரணமாக சாமானிய வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வரு கின்றனர்.
எனவே, சிறு வியாபாரிகள் பாதிக்காத வகையில் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒரு மாதத்தில் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலிக்கப் பட்டால் வரி உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற் போது ரூ.1.65 லட்சம் கோடி வரை வசூலாகிறது. இந்த சூழ்நிலையி லும், அன்பிராண்டட் எனப்படும் நிறு வன முத்திரையிடப்படாத பொருட் களான பால், தயிர், அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதேபோல், செஸ் வரி உயர்வை யும் மாநில அரசு திரும்பப்பெற வேண் டும். ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டம் சென்னையில் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கையாக தெரி வித்து கொள்கிறோம். இது பலகட்ட போராட்டங்களாக நடத்த திட்ட மிட்டு உள்ளோம். அரிசிக்கு வரி விதிக்கப்பட்டதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கும் உணவு பொருட்கள் தொகுப்பில் உள்ளூர் பொருட்களுக்கு முன்னு ரிமை அளித்து விநியோகம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகி றோம், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் பேர மைப்பின் மாநில இணைச்செயலா ளர் என்.சிவநேசன், மாவட்ட தலை வர் ஆர்.கே.சண்முகவேல், செயலா ளர் பொ.ராமசந்திரன், பொருளாளர் பி.செல்வம், இளைஞரணி செயலா ளர் லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.