districts

img

வழக்கறிஞர்களை கிரிமினல் போல் சித்தரிப்பதா? டிஜிபி சுற்றறிக்கையை திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 23 - வழக்கறிஞர்களை கிரிமினல்கள் போல்  சித்தரிக்கும் தமிழக காவல் துறை இயக்குந ரின் சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண் டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் அகில இந் திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் முன்பாக புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலச்  செயலாளர் அ.மணவாளன் தலைமை ஏற் றார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஒ. உதயசூரியன் கோரிக்கையை வலியுறுத் திப் பேசினார்.  அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்க ளுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து  சொல்ல தமக்கென வழக்கறிஞர்களை நிய மித்து கொள்ள இந்திய அரசியலமைப்பு மக்க ளுக்கு உரிமை வழங்கியுள்ளது. கைதிகள் வழக்கறிஞரை சந்தித்து தங்களுக்கான சட்ட  உதவிகளை பெறுவது என்பது மிக மிக முக்கி யமான அடிப்படை உரிமை. ஏதோ ஒரு சில  வழக்கறிஞர்கள் தவறு செய்கிறார்கள் என்ப தற்காக, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் சிறைக்கைதிகளைச் சந்திப்பதற்கு தடை  ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை  இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் சிறை கைதிகளைச் சந்திக் கும் வழக்கறிஞர் மேல் சந்தேகம் எழுகிறது என்று கூறி, காவல்துறை வழக்குப் பதிவு  செய்யலாம். விருப்பு வெறுப்பின் அடிப்படை யில், எந்த வழக்கறிஞர் மீதும் பொய் வழக்கு  பதியலாம்.  இதன்மூலம் சிறை கைதிகளுக்கான சட்ட உதவி வழங்குவதிலிருந்து வழக்கறிஞர்கள் விலகியிருக்க மறைமுகமாக காவல்துறை தூண்டுகிறது.இது அரசியல் அமைப்பு சட் டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை  மறுக்கும் நடவடிக்கை ஆகும். காவல்துறை  போடும் பொய் வழக்குகளில் சிக்கியுள்ள அப் பாவிகளைச் சிறையில் சந்தித்து என்ன  நடந்தது என விசாரித்தால் தான் அவருக்கான  சட்ட உதவிகளை வழக்கறிஞர் செய்ய இய லும். இதை இந்த சுற்றறிக்கையின் மூலம் காவல் துறை தடுக்க நினைக்கிறது என்றும்  குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த  வழக்கறிஞர்கள் திரளானோர் பங்கேற்றனர். முடிவில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபிகா நன்றி கூறி னார்.