districts

img

விடியல் அரசே... போக்குவரத்து ஊழியர்களுக்கு விடியல் எப்போது?

சேலம், ஜூலை 1- 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். இரவு பகல் பாராமல் உழைக்கிற அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் விடிய லுக்கு தமிழக அரசு தீர்வு காண  வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு ஓய்வுபெறும் நாளில் அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும். நல்லது, கெட் டது, இரவு, பகல் பாராமல் உழைக் கிறோம். எல்லோருக்கும் விடி யலை தருகிறோம் என்று சொல் கிற தமிழக முதல்வரே அரசு போக் குவரத்து தொழிலாளர்களுக்கு விடியலை எப்போது தருவீர்கள்? என்கிற முழக்கத்துடன் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் கோட்டத்திலுள்ள 19 போக்குவரத்து பணிமனைகள் முன்பு சிஐடியு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்  ராம கிருஷ்ணா சாலையில் உள்ள போக் குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் கோட்ட செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், கோட்ட தலை வர் செம்பன், பொருளாளர் சேகர்,  துணை பொதுச்செயலாளர் செந்தில் குமார், தமிழ்நாடு அரசு விரைவு  போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச்செயலா ளர் முருகேசன், ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்கள் சங்கத் தின் கோட்ட செயலாளர் அன்பழ கன், சம்மேளனக்குழு உறுப்பினர் இளவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், காசிபாளை யம் பணிமனை முன்பு சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் செய லாளர் ஜெயராமன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலை வர்கள் மணிபாரதி, ராமசாமி ஆகி யோர் உரையாற்றினர்.  இதேபோன்று பெருந்துறை, கோபி, கொடுமுடி, பவானி உள் ளிட்ட அரசு போக்குவரத்து பணி மனைகள் முன்பு சிஐடியு அரசு போக் குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழி யர்கள் போராட்த்தில் பங்கேற்ற னர்.