districts

கூலி உயர்வு தர ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுப்பு? விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டம்

திருப்பூர், பிப்.14- கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக  விசைத்தறி நெசவுக் கூலி தர மறுத்து அலட் சியமாக இருக்கும் ஜவுளி உற்பத்தியாளர் களைக் கண்டித்தும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் சட்டப்படி நிறைவேற்ற வலியுறுத்தி யும் 10 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் கருப் புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தப்பட் டது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்க ளில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட  பகுதிகளில் விசைத்தறித் தொழில் முதன் மைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இந்த பகுதி தான் அதிகளவில் விசைத்தறிகள் உள்ள  பகுதியாகும். ஏறத்தாழ ஒரு லட்சத்து 25 ஆயி ரம் விசைத்தறிகள் 10 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் இயங்கி வருகின்றன. இத்தொழி லில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக நடை பெற்று வரும் கூலி ஒப்பந்த பேச்சுவார்த் தைக்கு வர மறுக்கும் ஜவுளி உற்பத்தியா ளர்களை கண்டித்தும், மாநில அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு இப்பிரச்சி னைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், இப்பகு தியில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்க ளிலும் வெள்ளியன்று கருப்புக்கொடி ஏற்றி  போராட்டம் நடத்துவதென கோவை, திருப் பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு முடிவு செய்தது.  குறிப்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து தன் னிச்சையாக குறைக்கப்பட்ட கூலியை முழு மையாக வழங்க வேண்டும், இனி ஒப்பந்த கூலியை குறைக்காமல் வழங்கும் வகையில்  சட்டப் பாதுகாப்புடன் அமல்படுத்த வேண் டும், கடந்த ஓராண்டாக நீடித்து வரும் குறைக் கப்பட்ட கூலி மற்றும் மின் கட்டண உயர்வு,  விலைவாசி உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி  உயர்வு கோரிக்கைகளுக்கு ஜவுளி உற்பத்தி யாளர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதன் பொருட்டு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நல ஆணையமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத் தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். இந்நிலையில் கருப்புக்கொடி போராட் டம் தொடர்பாக, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுக்கு செய்யும் விசைத்தறி உரி மையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ச.ஈ. பூபதி கூறும்போது, “அவிநாசி, தெக்கலூர்,  சோமனூர், காரணம்பேட்டை, புதுப்பாளை யம் என கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 130 கிராமங்களில் 1. 25 லட்சம் விசைத்தறி இயந்திரங்கள் கொண்ட, 10 ஆயிரம் விசைத் தறி கூடங்களின் முன்பு கருப்புக்கொடி கட்டி  போராட்டம் நடந்துள்ளது. ஏற்கனவே பலர்  இத்தொழிலை விட்டு வெளியேறிய நிலை யில், அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.