ஈரோடு, ஜூலை 23- அடிப்படை வசதிகளை தீர்க்காத கவுன்சிலரைக் கண்டா வரச்சொல் லுங்க என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் கடம்பூர் பேருந்து நிலையத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை யில் சின்ன சாலட்டி - கோட்டக்காடு சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும். குட்டக்காட்டி லிருந்து சின்னசாலட்டிக்கும், எள்ளுப்படுகிலிருந்து அணக்காடு வரையிலான பாதையை தார்ச்சாலை, வீதி தளம் உள்ளிட்ட வற்றை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட் டது. ஆனால், தற்போது வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, மக்கள் கோரிக் கைகளை நிறைவேற்றாத கவுன்சி லரை கண்டித்து, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் இணைந்து நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த னர். அதில், கவுன்சிலரைக் கண்டா வரச்சொல்லுங்க என மொட்டைய டித்து நாமம் போட்டபடியும், மனித உருவ பொம்மைக்கு மலர் மாலை சூட்டியவாறு திங்களன்று கடம்பூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு, குப்புசாமி மற்றும் ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், வாலிபர் சங்க மாநிலப் பொரு ளாளர் கே.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.ராணி மற்றும் மாவட்டச் செயலா ளர் பா.லலிதா மற்றும் மலை வட்டார கமிட்டி நிர்வாகிகள் சி.துரைசாமி, பி. தங்கவேல், சின்னசாமி, ராஜாமணி, பசுவராஜ், அஜித்குமார், தாயலம் மாள், பழனியம்மாள், வினோதினி உள்ளிட்ட நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர். கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி போராட்டம் நடைபெற்றது. பின்பு காவல் துறையினர் உருவ பொம்மையை போராட்டக்காரர் களிடமிருந்து கைப்பற்றினர். முடி வில், ஜோதிபாசு நன்றி கூறினார். வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தின் இந்த நூதன போராட்டத்தால் அப்ப குதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.