districts

img

எம்.பி.,க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு மோடியின் உருவபொம்மை எரித்து போராட்டம்

ஈரோடு, டிச.20- நாடாளுமன்றத்தில் 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய் யப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் மோடியின் உருவ பொம்மை எரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பார்வையாளர் கள் மாடத்திலிருந்து அத்துமீறி குதித்த இரண்டு பேர், முழக் கங்களை எழுப்பியவாறு கலர் புகை குப்பிகளை வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 6  பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பாது காப்பு கேள்விக்குறியானதை அடுத்து, இச்சம்பம் தொடர்பாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண் டும் என சிபிஎம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி  எம்பிக்கள், கோரிக்கை முழக்கங்களை நாடாளுமன்றத்துக் குள் எழுப்பினர். இதையடுத்து, இரு அவைகளிலிருந்தும் சுமார் 143 எம்.பி.,க்களை இடைநீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். உலகின் எந்த பகுதியிலும் நடைபெறாத வகையில், இந் திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை சீர்குலைத்த மோடி அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, ஒன்றிய அரசின், சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது, மோடியின் உருவ பொம்மையை எரித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மு.வரதராஜன் தலைமை வகித்தார், மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.சசி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பாலசுப்பிரமணி, செய லாளர் முருகேசன், மதிமுக துணைச் செயலாளர் ஜீவானந் தம், திராவிடர் கழகம் கு.சண்முகம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.