districts

img

மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சேலம், ஆக.10- கருமந்துறை அருகே புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கிளாக் காடு பகுதியில், புதிதாக அரசு மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் இளைஞர் சங்கத்தினர் சனியன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். கருமந்துறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க இடைகமிட்டி செயலாளர் எ.மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.பெரியசாமி கண்டன உரையாற்றினார். இதில் சங்கத்தின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் எ.பாக்கி யராஜ், மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் வி.சின்னமணி, தலைவர் ஜி.தமிழரசன், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.தர்மலிங்கம், ஜி.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய துணைத்தலை வர் எல்.சத்யராஜ் நன்றி கூறினார். இதில் அப்பகுதி பொது மக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.