districts

img

மோட்டார் வாகன சட்டம்: சாலையில் 15 நிமிடம் வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பு

தருமபுரி, பிப்.28- மோட்டார் வாகன சட்டத்தை திரும் பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலை  போக்குவரத்து, ஆட்டோ சங்கங்களின் முன்னெடுப்பில், சாலையில் 15 நிமிடங் கள் வாகனத்தை நிறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை தெரிவித்த னர். புதிய வாகனங்கள் வாங்க அரசு மானியம் வழங்குவதுடன், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட் டியில் கடன் பெற ஏற்பாடு செய்ய வேண் டும். தொழிலை முறைப்படுத்த ஆட்டோ, டாக்சி கட்டணத்தை அரசு நிர்ணயம்  செய்ய வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், எரி வாயு விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்ட ணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 15 நிமிடம் அனைத்து வாகனங்களையும் நிறுத்தும் போராட் டத்திற்கு சிஐடியு சாலை போக்குவரத்து சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி தருமபுரி, நான்கு ரோடு அருகே வாகன நிறுத்த போராட்டம் சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா தலை மையில் நடைபெற்றது. அரசு போக்கு வரத்து கழக மண்டல தலைவர் எஸ். சண்முகம், மண்டல செயலாளர் சி. முரளி, ஆட்டோ சங்க மாவட்ட செயலா ளர்  ராஜகோபால், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள் ஆகி யோர் உரையாற்றினர். வெள்ளிசந்தை யில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி. கலாவதி, காரிமங்கலத்தில் சாலை போக் குவரத்து சங்க மாவட்ட தலைவர் பெரு மாள், கம்பைநல்லூரில் சாலை போக்கு வரத்து சங்க மாவட்ட செயலாளர் எஸ். ஆனஸ்ட்ராஜ், அரூரில் சிஐடியு துணைத் தலைவர் சி.ரகுபதி ஆகியோர் தலை மையில் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், திரளான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்ட னர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் வாகன நிறுத்த போராட் டம் நடைபெற்றது. இதில், சாலை போக் குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சு. சுரேஷ், பொருளாளர் ஆர்.காளியப் பன், துணைச்செயலாளர்கள் செரிப், நவாப், ஜான், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆனந்தன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, செயலாளர் தண்டபாணி, அரசு போக்குவரத்து கழக  ஊழியர் சங்க தலைவர் வரதராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டத்தில் ஆறு மையங் களில் வாகன நிறுத்த போராட்டம் நடை பெற்றது. சாய்பாபா காலனியில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் முத்துக் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட  பலர் கலந்து கொண்டனர். சிங்காநல் லூர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், பொருளாளர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர் கலந்து  கொண்டனர். காந்திபுரம், ஜி.பி.சிக்னல்  பகுதியில் ஆட்டோ சங்க நிர்வாகி மாணிக் கவாசகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சுமைப்பணி தொழிலா ளர் சங்க செயலாளர் ராஜன், இரவு நேர பாதுகாவலர்கள் சங்க மாவட்ட செயலா ளர் என்.செல்வராஜ் ஆகியோர் பங்கேற் றனர். டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற  போராட்டத்திற்கு பி.சி.முருகேசன் தலைமை ஏற்றார். சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர். கோவை, கணபதி சூர்யா மருத்துவ மனை அருகே நடைபெற்ற போராட்டத் திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் இரா.செல்வம் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி சாலை, லட்சுமி மில் பகுதியில் நடை பெற்ற போராட்டத்திற்கு சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட நிர்வாகி ரத்தனகுமார், எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் திராளனோர் பங்கேற்ற னர். 

நீலகிரி

உதகை, எடிசி பேருந்து நிலையம் முன்பு சிஐடியு சார்பில் வாகன நிறுத்த  போராட்டம் நடைபெற்றது. போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட பொரு ளாளர் நவீன் சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா, மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அடையாளகுட்டன், விவசாய சங்க தலைவர் கே.ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராஜரத்தி னம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற னர். அனுமதியின்றி போராட்டம் நடத்தி யதாக அனைவரும் கைது செய்யப் பட்டு, மாலையில் விடுதலை செய்யப் பட்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சிஐடியு சாலை போக்குவ ரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையி லும், ஜங்ஷன் பகுதியில் சிஐடியு மாவட்ட செயலாளர் கோவிந்தன், புதிய  பேருந்து பகுதியில் சிஐடியு மாவட்ட  தலைவர் டி.உதயகுமார், சீலநாயக்கன் பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வெங்கடபதி, முருகேசன், மேட்டூர் பகுதியில் மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ, கருப்பண்ணன் மற்றும் வாழப் பாடி தீவட்டிப்பெட்டி ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பங் கேற்றனர்.