திருப்பூர், ஆக. 1 – மோடி அரசின் மக்கள் விரோத, கார்ப்ரேட் பெருமுதலாளிகளுக்கு ஆத ரவான பட்ஜெட்டை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் எட்டு மையங்களில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட பெண்கள் உள்பட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பிருந்து இடதுசாரி கட்சியினர் மறியல் ஊர்வலம் தொடங்கினர். திருப் பூர் தலைமை தபால் நிலையம் முன்பா கச் சென்று முற்றுகையிட்டு சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.ஜெய பால், ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட் டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், துணைமேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் கண்டன முழக்கம் எழுப்பினர். இதில் பெண் கள் 95 பேர் உள்பட மொத்தம் 293 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவிநாசி
அவிநாசி சேவூர் சாலையில் இருந்து இரு கட்சியினர் பேரணியாகப் புறப் பட்டு, தபால் நிலையம் முன்பாக மறிய லில் ஈடுபட்டனர். இந்த போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வர மூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் பி.முத்து சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்ட துணைச் செயலாளர் எம். மோகன், ஒன்றியச் செயலாளர் முத்து சாமி, துணைச் செயலாளர் கோபால், ஆகியோர் தலைமையில் 101 பெண்கள் உள்பட 212 பேர் கைதானார்கள்.
தாராபுரம்
தாராபுரம் பேருந்து நிலையம் முன்பி ருந்து ஊர்வலம் புறப்பட்டு இன்சூ ரன்ஸ் அலுவலகம் முன்பு சாலை மறி யல் நடைபெற்றது. இந்த போராட்டத் துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கட் ராமன் ஆகியோரும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, ஏஐஒய்எப் நிர்வாகி எம்.ரவிச்சந்திரன், தாராபுரம் ரகுபதி ஆகியோரும் தலைமை ஏற்று சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் மொத்தம் 64 பெண்கள் உள்பட 134 பேர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டனர்.
ஊத்துக்குளி ஆர்.எஸ்.
ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் கனரா வங்கி முன்பிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜி.சண்முகம், தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன் ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில் பெண்கள் 56 பேர் உள்பட மொத்தம் 123 பேர் கைதானார்கள். உடுமலை உடுமலைபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சி சாலையில் உள்ள கட்சி அலு வலகம் முன்பிருந்து புறப்பட்டு தபால் நிலையம் முன்பாகச் சென்று மறியலில் ஈடுபட்ட னர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில், நகரச் செயலாளர் கே. தண்டபாணி, உடுமலை ஒன்றியச் செய லாளர் கி.கனகராஜ், குடிமங்கலம் ஒன் றியச் செயலாளர் என்.சசிகலா, மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.பஞ்சலிங்கம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பெண் கள் 23 பேர் உள்பட மொத்தம் 109 பேர் கைது செய்யப்பட்டனர். உடுமலை பாரத வங்கி முன்பு முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சௌந்தரராஜன் தலைமை யில் 17 பெண்கள் உள்பட 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்லடம்
பல்லடத்தில் பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கி இரு கட்சியி னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறியல் செய்யச் சென்றனர். பேருந்து நிலையம் முன்பாக காவல் துறையினர் தடுத்ததால் அதே இடத்தில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பவித்ராதேவி, ஆர்.பரமசிவம் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப் பினர் பி.நதியா, பொங்கலூர் ஒன்றி யச் செயலாளர் தங்கவேல், பல்லடம் ஒன்றியச் செயலாளர் சாகுல் அமீது ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில் பெண் கள் 14 பேர் உள்பட மொத்தம் 98 பேர் கைது செய்யப்பட்டனர்.
மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்கு ளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மறியலில் ஈடுபட்டனர். மடத்துக் குளம் நால்ரோடு முன்பிருந்து ஊர்வ லமாகப் புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக தபால் நிலையம் முன்பு மறிய லில் ஈடுபட்டனர். முன்னதாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர்.மதுசூதனன், தாலுகா செயலா ளர் ஆர்.வி.வடிவேலு, தாலுகா குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் ஆகியோர் தலைமையில் 18 பெண்கள் உள்பட 38 பேர் கைதானார்கள். காங்கேயம் காங்கேயத்தில் பேருந்து நிலை யம் முன்பிருந்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊர்வலமாகப் புறப் பட்டு தபால் நிலையம் முன்பாக மறியல் செய்வதற்காகச் சென்றனர். ஆனால் வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பேருந்து நிலை யம் ரவுண்டானா முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் செ.மணிகண்டன், தாலுகா செயலாளர் கே.திருவேங்கட சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 27 பேர் கைதானார்கள். கைது செய்யப்பட்ட வர்களை தனியார் மண்டபங்களில் வைத்திருந்து பிற்பகலுக்கு மேல் விடு வித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் நடைபெற்ற மறியல் ஊர்வலத்தில் மொத்தம் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டனர்.